உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

நூலக விழிப்புணர்வு பிரசாரம்


கடலூர் :

                 உலக புத்தக நாள் விழாவையொட்டி மாவட்ட மைய நூலகம் - வாசகர் வட்டம் சார்பில் நூலக விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் நடந்தது. புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் பச்சையப்பன், அரிமா பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் சுதர்சனம் வரவேற்றார். பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பேசினார். சட்ட பல்கலைக் கழக செனட் உறுப்பினர் வக்கீல் அருளப்பன் சேதுராமன், முத்தையன், சாமிகண்ணு, அரசு வக்கீல் சிவராஜ், வக்கீல் திருமார்பன், செல்ல கந்தசாமி, சந்தான சுகிர்தராசு, கவிஞர்கள் வேலுமணி, சிங்காரம், கவிமனோ, பேரொளி உள்ளிட்ட பலர் பேசினர். நூலகர் வைரமணி நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior