உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

முந்திரித்தோப்பில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

 ஸ்ரீமுஷ்ணம் : 

                  முந்திரி தோப்பில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஸ்ரீஆதிவராகநல்லூரில் இருந்து கண்டியங்குப்பம் செல்லும் வழியில் சின்னப்பன் என்பவரது முந்திரி தோப்பு உள்ளது. இங்கு நேற்று 35 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார். அருகில் விஷ மருந்து மற்றும் குவாட்டர் மது பாட்டிலும் கிடந்தது. மேலும், இறந்தவர் பச்சை கலர் கைலியும், கோடு போட்ட சட்டை ஆரஞ்சு கலர் பனியன் போட்டிருந்தார். அவரது வலது கையில் ரகுபதி சுந்தரி என பச்சையும், கழுத்து மற்றும் கன்னத்தில் கறுப்பு தழும்புகள் உள்ளன. மேலும், அவரது சட்டை காலரில் ஆர்.ஆர் டைலர், ஏ.என்.பேட்டை என்ற சிலிப் உள்ளது. இதுகுறித்து ஸ்ரீஆதிவராகநல்லூர் வி.ஏ.ஓ., குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ் ணம் போலீசார் இறந்த நபர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior