உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

இன்று பொது வேலைநிறுத்தம்: பொதுமக்கள் ஆதரவு தருமாறு எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

         அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

                  விலைவாசி உயர்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி ஜனதா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அ.தி.மு.க. உள்பட 13 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 12-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்றது.மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் ஏப்ரல் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதென அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

                  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்; பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். வணிகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தர வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

                  இப்போராட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் புதிய பென்சன் திட்டத்தை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எழும்பூர் மற்றும் கிண்டி ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில், சாலை போக்குவரத்து தடையின்றி இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. க

                  டைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று வணிகர் சங்கங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. மதுரை, திருவண்ணாமலைக்கு விலக்குசித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior