உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

அ.தி.மு.க., பிரமுகர் கொலை: போலீசார் தீவிர விசாரணை

 நெல்லிக்குப்பம் : 

                  நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு பெண்ணையாற்று தெருவை சேர்ந்த ரத்னம் மகன் தயாளன் (35). கூலித் தொழிலாளியான இவர் அ.தி.மு.க., முன்னாள் கிளைக் கழக செயலர். இவரது அண்ணன் ரவி (38). இவர்கள் இருவரும் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து தாக்கிக் கொள்வது வழக்கம். சமாதானம் செய்பவர்களிடமும் இவர் ள் தகராறு செய்வர். அதனால் யாரும் சமாதானம் செய்வதில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தயாளன், ரவி இருவரும் குடிபோதையில் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து இரவு தயாளன் வீடு திரும்பவில்லை. வழக்கம் போல் அங்குள்ள மண்டபத்தில் தூங்குவார் என குடும்பத்தினர் நினைத்தனர். காலையில் தலையில் தாக்கப் பட்டு தயாளன் இறந்து கிடந்ததை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். குடிபோதையில் ரவி தாக்கியதில் தயாளன் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின் றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior