உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

என்எல்சியில் பலத்த பாதுகாப்பு

நெய்வேலி:
         
                எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஒட்டி நெய்வேலி என்எல்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நெய்வேலி டி.எஸ்.பி.​ மணி தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 27-ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.​ தமிழகத்தில் அதிமுக தலைமையில் கம்யூனிஸ்ட்,​​ மதிமுக,​​ பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் நெய்வேலியில் உள்ள சில தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு ​ தெரிவித்துள்ளன.​ எனவே எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நெய்வேலி டி.எஸ்.பி.​ மணி தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் 15 எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட 250 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே என்எல்சிக்கு வீடு நிலம் வழங்கிய கிராம மக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை என்எல்சி பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது.​ இச் சமயத்தில் இழப்பீட்டுத் தொகை பெற வரும் கிராம மக்கள் எவ்வித சிரமமின்றி,​​ வந்து செல்ல சிறப்பு போக்குவரத்து வசதிகளை என்எல்சி நிர்வாகம் செய்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior