உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

புதுச்சேரியில் கொலை: சிதம்பரத்தில் ஒருவர் சரண்

 சிதம்பரம் : 

                   புதுச்சேரி பால் பண்ணை உரிமையாளர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் சிதம்பரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்த பால் பண்ணை உரிமையாளர் சுப்பையா. இவர் கடந்த 3ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதற்கிடையே முதலியார்பேட்டை வரதப்பிள்ளை தோட்டம், அம்பேத்கர் சாலையைச் சேர்ந்த மணி மகன் நாகராஜ் (35) சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior