உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

குளிர்சாதனக் கருவிகள் வழங்கிய கெம்ப்ளாஸ்ட் நிறுவனம்

 கடலூர்:

               கடலூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குளிர்சாதனக் கருவிகளை,​​ கடலூர் கெம்ப்ளாஸ்ட் பி.வி.சி.​ நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது. சமுதாயப் பணியின் ஓர் அங்கமாக,​​ தலா 2 டன் திறன்கொண்ட 3 குளிர்சாதனப் பெட்டிகளை,​​ கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறது.​ அவற்றை கெம்ப்ளாஸ்ட் நிறுவன கடலூர் தொழிற்சாலை முதன்மை நிர்வாகி ​(இயக்கம்)​ என்.எஸ்.மோகன் வழங்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார்.​ ​ கடலூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு இந்த குளிர்சாதனக் கருவிகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன்,​​ மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார்,​​ மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தாரஜன்,​​ கண்காணிப்பாளர் டாக்டர் பரஞ்சோதி,​​ கெம்ப்ளாஸ்ட் நிறுவன பொது மேலாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகுமார்,​​ சங்கர்,​​ மரியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior