உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிப்பு







                  ""பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது,'' என்று, சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

              பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.  சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை கமிஷனர் ஜோதி நிர்மலா, மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகம், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்,  அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: 

                  "எச்1என்1' எனப்படும் பன்றிக் காய்ச்சல், கேரளாவில் பரவுவதாக செய்தி வந்ததும், அந்த நோயை தடுப்பது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பின், கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் ஆறு மாவட்டங்களின் துணை சுகாதார இயக்குனர்களை தொடர்பு கொண்டு, இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை தெரிவித்தோம். பஸ் ஸ்டாண்ட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரிசோதனை நடத்தப்படுகிறது.  தமிழகத்தில் இதுவரை 21 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 பேர், சென்னையில் மூன்று பேர், திருவள்ளூரில் இரண்டு பேர், நாகை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

              இந்த காய்ச்சலால் ஒருவர் கூட இறக்கவில்லை. மக்கள் வீண் பீதியை பரப்பக் கூடாது. இந்நோயின் வீரியம் குறைந்துள்ளது. நோயை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான, "டாமி ப்ளூ' மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளன. அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருந்து அனுப்பப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையிலான குழு, கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை இக்குழு கண்காணிக்கும். அரசு மருத்துவமனைகளில், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

                  நோய் அறிகுறிகளான இருமல், சளி, காய்ச்சல் இருந்தால், உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தும்மல் வரும் போது, துணியால் மூக்கை பொத்த வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு, வேறு மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கக் கூடாது. நோய் முற்றிய பின் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior