உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

கடலூரில் ஊரக வளர்ச்சித்துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

               ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் திட்ட இயக்குநரின் அநாகரிகமான பேச்சினால் மனமுடைந்த சாலை ஆய்வாளர் சித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலை கண் டித்து கடலூர் பீச்ரோட் டில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட  துணைத் தலைவர் துரை, செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஆதவன் காசிநாதன் உள்பட  பலர் பங் கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior