உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

பூட்டிக் கிடந்த வட்டாரவள மைய அலுவலகம்

பண்ருட்டி: 

            பண்ருட்டி அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மைய அலுவலகம் நேற்று காலை 10.15 மணிவரை திறக்காமல் பூட்டிக் கிடந்தது. பண்ருட்டி பூங்குணம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று காலை 10.15 மணி வரை திறக்கப்படாமல் பூட்டியிருந்தது. அதன் பிறகு வட்டார வள மைய பயிற்றுநர் கோமதி மையத்தை திறந்தார்.

இதனைத் தொடர்ந்து 10.30 மணிக்கு வந்த மேற்பார்வையாளர் தங்கசாமி கூறுகையில்,

                "காடாம்புலியூர் உண்டு உறைவிட பள்ளி ஆய்வுக் காக சென்று வந்ததால் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் வரமுடியவில்லை. அலுவலகம் திறப்பதற்கு நியமித்த பயிற்றுநர்கள் திறக்காதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior