உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ்.பி.,யை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பண்ருட்டி: 

                  பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ்.பி.,யை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பண்ருட்டி அடுத்த நத்தத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் மகேஸ்வரி (22). இவர் ஒறையூரைச் சேர்ந்த கிருஷ்ணனுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் மகேஸ்வரியிடம் கிருஷ்ணன் வரதட்சணை கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மகேஸ்வரி விஷம் குடித்து இறந்தார். இதுகுறித்து கண்ணன் புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரில் தனது மகள் இறப்பிற்கு  கிருஷ்ணன், சரவணன், மகாராணி ஆகியோர் காரணம் என தெரிவித்தார். அதன் பேரில் புதுப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட மூவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.எஸ்.பி., பிரசன்னகுமாரை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior