உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

முதியவரின் கவனத்தை சிதறடித்துரூ.2 லட்சம் திருட்டு: மூவருக்கு வலை

கடலூர்: 

                 முதியவரின் கவனத்தை சிதறடித்து 2 லட் சம் ரூபாயை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவர் நேற்று முன்தினம் மதியம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள இந்தியன் பாங்கிற்கு சென்று தனது கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் எடுத்தார். அதனை பையில் போட்டு தனது மொபட் டில் மாட்டிவிட்டு புறப்பட தயாரானார். அப்போது அங்கு நின்றிருந்த மூன்று பேர், பணம் கீழே கிடப்பதாக கூறினர். உடன் முத்துக்கருப்பன் கீழே கிடந்த பணத்தை எடுக்க முயன்றார்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட 3 பேரும் முத்துக்கருப்பன் மொபட்டில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்கள் மூவரையும் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior