உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்: துர்நாற்றம் வீசும் பஸ் நிலையம்

விருத்தாசலம்: 

                விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. விருத்தாசலம் நகரத்தில் பிரதான சாலையாக ஜங்ஷன் ரோடு, கடைவீதி இருப்பதால் இந்த இரண்டு சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். 

                  இப்பகுதியில் உள்ள கடைகள், டீ கடைகள், ஒயின் ஷாப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் சாக்கடை கால்வாயில் போடுகின்றனர். இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. நேற்று காலை கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர்  சாலையில் வழிந்து ஆறுபோல் ஓடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடன் நகராட்சி ஊழியர்கள் கால்வாயிலிருந்த அடைப்பை எடுத்து சரிசெய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior