உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

மேலவையில் பிரதிநிதித்துவம் அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

கடலூர்: 

                 தமிழக அரசின் சட்ட மேலவையில் அரசு அலுவலர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநிலத்தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார்.

               கூட்டத்தில், தமிழகத் தில் அமையவுள்ள மேலவையில் 78 உறுப்பினர்களைக் கொண்டு செயல்படப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப் பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 52 உறுப்பினர்களும், பட்டதாரி ஆசிரியர்களால் ஏழு பேரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 7 பேரும் நியமிக்க உள்ளனர். 12 உறுப்பினர்களை ஆளுனர் நியமிக்கவுள்ளார். இதில் அரசு அலுவலர்களுக்கு வாய்ப்புகள் ஏதுமில்லை. இப்பிரதிநிதித்துவ உரிமையை இழந்தவர்களாக அரசு அலுவலர்கள் உள்ளனர்.அரசு அலுவலர்களின் நிரந்தர பாதுகாவலராக விளங்கும் முதல்வர் மேலவையில் பிரதிநிதித்துவம் வழங்க கேட்டுக் கொள்கிறோம் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior