உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

பள்ளியில் அரசு விழா: மாணவர்களின் படிப்பு பாதிப்பு

நெல்லிக்குப்பம் : 

               நெல்லிக்குப்பம் பகுதிகளில் அரசு விழா என்றால் பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

                அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சி முத்துக்கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் அபூர்வம் தலைமை தாங்கினார். பலராமன், சங்கர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பன்னீர்செல் வம் வரவேற்றார்.   டி.ஆர்.ஓ., நடராஜன், எம்.எல். ஏ., சபாராஜேந்திரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். சமூக  நல பாதுகாப்பு தாசில்தார் மங்களம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் உட்பட பலதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டா 14 பேருக்கு உதவித்தொகை ஆறு பேருக்கு பட்டா மாற்றம் உத்தரவுகள் வழங்கப்பட்டது.

இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமையல் கூடத்தை எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் திறந்து வைத்து பேசுகையில், 

                   "அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களால் வருவாய் துறையினருக்கு ஓய்வே இல்லை. குடிசை வீடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறப்போகிறது. மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். உங்களுக்காக பணியாற்றவே நாங்கள் இருக்கிறோம்' என கூறினார். அரசு சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம், மனுநீதிநாள், மக்கள் குறைகேட்பு என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அப்பகுதிகளில் உள்ள பள்ளியிலேயே அதுவும் வேலை நாட்களில் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சி துவங்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பே மைக் செட்கட்டப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படுவதுடன் அன்று முழுவதும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior