உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர் தாக்கு: 5 பேர் மீது வழக்கு

கடலூர்: 

                 ஊராட்சி தலைவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரங்கி. இவர் ஊராட்சி தேர்தலில் அருள்நாதனை எதிர்த்து நின்று தோற்றவர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரங் கிக்கு சொந்தமான டிப்பர் லாரி (டி.என் 31 1976) கன்னிமாநகர் செம்மண் குவாரி அருகே நடந்து சென்ற அருள்நாதன் மீது மோதுவது போல் வந்தது. இதனையடுத்து அருள்நாதன் லாரி நிறுத்தி டிரைவரை திட்டினார்.

                    இதில் ஆத்திரமடைந்த அருகில் இருந்த ஆரங்கி, பழனிவேல் மற்றும் சிலர் அருள்நாதனை, திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஆரங்கி, பழனிவேல் மற்றும் அருள்நாதன், கிளார்க் சக்கிவேல், தட்சணா ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் வக்கீல் அருள்நாதனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி கடலூரில் வக்கீல்கள் நேற்று (29ம் தேதி) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior