உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் அரசு பள்ளியைதரம் உயர்த்த கோரிக்கை

விருத்தாசலம்: 

                 தீவளூர் அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி முதல்வருக்கு விடுத் துள்ள கோரிக்கை மனு:

                 திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் கிராம அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி கடந்த 24 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த கிராமத்தில் உள்ள மாணவ - மாணவிகள் தங்களின் மேல்நிலைக் கல்வியை தொடர பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 2010- 11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆதி திராவிடர் நலத்துறையின் மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் நான்கு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதில் தீவளூர் பள்ளியும் ஒன்றாகும். இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் கள் மேல்நிலைக் கல்வியை சிரமத்துடனே பயின்று வருகின்றனர். எனவே இப்பள்ளியை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior