உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

விருத்தாசலம் அருகேதிடீர் சாலை மறியல்

விருத்தாசலம்: 

              விருத்தாசலம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைக்கு மண் அணைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒருசிலரின் வீடுகளுக்கு முன் இருந்த மண்ணை வெட்டும் போது, எங்கள் வீட்டு மண்ணை வெட்டக்கூடாது என வீட்டின் உரிமையாளர்கள் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விருத்தாசலம் - கம்மாபுரம் சாலையில் நேற்று காலை 10.40 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர் பிரமுகர்கள் சமாதானம் செய்ததை அடுத்து ஐந்து நிமிடத்தில் மறியலை கைவிட்டு கலைந்து சென்று  பணியை தொடர்ந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior