உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

காங்., கட்சியின் 125ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

புவனகிரி :

           காங்., கட்சியின் 125ம் ஆண்டு துவக்க விழா மற்றும் மத்திய அமைச்சர் வாசன் பிறந்த நாள் விழா காங்., கட்சியினரால் மாவட் டத்தில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

                புவனகிரி வட்டார காங்., சார் பில் சேர்மன் தனலட்சுமி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் காங்.,பிரிவு தலைவர் குமார் தலைமையில் ராகவேந்திரர் கோவில் தனித்தனியே சிறப்பு பூஜை நடத்தி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார காங்., தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் கந்தசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம், மஞ்சக்கொல்லை வேல்முருகன், இளையபெருமாள், பாலு, பாலசுந்தரம், புவனகிரி விவசாய சங்க தலைவர் குமார், மாவட்ட செயலாளர் ரகுநாதன், இளைஞர் காங்., துணை தலைவர் பன்னீர்செல்வம், விவசாய பிரிவு செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 திட்டக்குடி:

                   மாநில சேவாதள அமைப்பாளர் அன்பரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், நகர தலைவர் கனகசபை முன்னிலை வகித்தனர். குணசேகரன் வரவேற்றார். திட்டக் குடி நானூற்றொருவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட் டது. முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதில் இளைஞர் காங்., நிர்வாகிகள் பாலமுருகன், சவுந்தர்ராஜன், வக்கீல் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


விருத்தாசலம்:

                  நகர காங்., சார்பில் நடந்த விழாவிற்கு இளைஞர் காங்., மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராதாகிருஷ் ணன், ராமு, துரைசாமி முன் னிலை வகித்தனர். ஜெட்லி வரவேற்றார். மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன் னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி, வட்டார தலைவர் ராஜிவ்காந்தி, ராஜரத்தினம், சவுந்தரராஜன், சண் முகம், இளங்கோமணி, இளைஞர் காங்., நகர தலைவர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நெய்வேலி:

                  நகர காங்., சார்பில் நடந்த விழாவிற்கு நகர எஸ்.சி., எஸ்.டி., தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். கலியமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் புருஷோத்தமன், மாநில சேவாதள அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் கோவிந்தராஜ், சத்தியசீலன், தங் கம், ராமர் பங்கேற்றனர்.

கடலூர்:

                தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன் சார்பில் மாவட்ட  தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior