உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

மீனவர்கள் கோஷ்டி மோதல்: சமாதானக் கூட்டம்

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டை அருகே மீனவர்கள் கோஷ்டி மோதலையொட்டி  தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.

                    பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கிராம மீனவர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். இருந்தும் கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சிதம்பரம் தாசில்தார் தனவந்தகிருஷ்ணன் தலைமையில் சமாதானக் கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. அதில் இரு பிரிவுகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருபிரிவுகளை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து அதன் மூலமே கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துகொள்ளுவது, அதையும் மீறி பிரச்னை ஏற்பட்டால் போலீஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ், துணை சேர்மன் செழியன், வருவாய் ஆய்வாளர் ஹேமா ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior