உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்: டி.எஸ்.பி., மூவேந்தன் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டையில் நடந்த போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாமில் டி.எஸ்.பி., மூவேந்தன் பங்கேற்றார்.பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லீஸ் இணைந்து போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு முகாம் மஹ்மூதியா ஷாதி மகாலில் நடந்தது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்றார். மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து விதிகள் குறித்து டி.எஸ்.பி., மூவேந்தன் பேசினார்.

             சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் காஜா கமால், பாவாஜான், நடராஜன், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பா.ம.க., நகர செயலாளர் முருகன், கொத்தட்டை ஊராட்சி தலைவர் பழனி, தி.மு.க., இளைஞரணி அமைப் பாளர் முனவர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர். ஐக்கிய மஜ்லீஸ் பொதுச் செயலாளர் இஸ்ஹாக் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior