உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

தம்பி மனைவிக்கு தீ வைத்த அண்ணனுக்கு போலீஸ் வலை

சிதம்பரம் :

               தம்பி மனைவியை தீ வைத்து எரித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த வல்லத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் (60), சிவலிங்கம் (56). சகோதரர்களான இவர்களுக்குள் வேலித் தகராறு உள்ளது. நேற்று பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள பூவரசு மரத்தை சிவலிங்கம் வெட்ட முயன்றதில் தகராறு ஏற்பட்டது.அப்போது சுப்ரமணியன் அவரது மகன் கள் வீராபாண்டியன் (30), பன்னீர்செல் வம் (32) ஆகியோர்  சிவலிங்கம் மற்றும் அவரது மனைவி செல்வியையும் ஆபாசமாக திட்டி தாக்கினர்.

                  ஆத்திரமடைந்த செல்வி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக கூறினார். உடன் சுப்ரமணியன், செல்வி மீது தீயை பற்ற வைத்தார். இதில் படுகாயமடைந்த செல்வி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியன், வீரபாண்டியன், பன்னீர்செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior