உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

மணல் லாரிகளால் சாலைகள் பாழானது



நெல்லிக்குப்பம் :

                   மேல்பட்டாம்பாக்கத்தில் மணல் லாரிகள் சென் றதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை கள் பாழாகி யுள்ளன. மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றில் 6 மாதங்களுக்கு மேல் அரசு மணல் குவாரி செயல் பட் டது. தினமும் ஆயிரத்திற் கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றிச் சென்றது. மழைக் காலத்திலும் தொடர்ந்து மணல் லாரிகள் சென்றதால் மேல் பட்டாம்பாக்கம் முக்கிய சாலை  வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழியுமானது. சாலையை சீர் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர். மழை நின்றதும் சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதுவரை வேலை துவங்கவில்லை. அச்சாலையில் தற்போது அதிகம் கரும்பு டிராக்டர்கள் வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனடியாக சாலையை புதுப்பிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior