உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

வெள்ளத்தில் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர் :

               கடலூரில் மா.கம்யூ., கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனைச் செல்வம் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப் பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப் பினர் தனசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், முத்துவேல், சுகுமாறன், மாதவன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

                கூட்டத்தில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற் பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் சேதமடைந் துள்ளன. வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குண்டும், குழியுமாகியுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. காட்டுமன்னார்கோவில்: மா.கம்யூ.,  வட்ட குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் நடந் தது. வட்டச் செயலா ளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  வட்ட குழு உறுப்பினர்கள் நீலமேகன், ராமு, கிருஷ்ணமூர்த்தி, தங்கசாமி, பூராசாமி பங்கேற்றனர். கூட்டத்தில், மழை, வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் சரி செய்து கொடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior