உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் திண்டிவனத்தில் கார் மோதி பலி

திண்டிவனம் :

                       திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார். கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் தமிழ்ச்செல்வமணி. இவரது மகன் பிரியதர் ஷன்(18). இவர் திண்டிவனம் அடுத்த சாரம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.பிரியதர்ஷன் நேற்று மாலை 4.40 மணியளவில்  வகுப்பு முடிந்த பின் சக மாணவர்களுடன் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த டாடா சுமோ  ஒன்று திடீரென  பிரியதர்ஷன் மீது மோதியது.

                 பலத்த காயமடைந்த  பிரியதர்ஷனை விபத்து ஏற்படுத்திய வாகனம் மூலம் சக மாணவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதால் மாணவர்கள் வெளியே வந்து  பார்த்த போது, விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதை தொடர்ந்து வேறு வாகனம்  மூலம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வாகனத்தை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior