உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

பஸ் டயர் வெடித்தது: தொழிலாளி காயம்

திட்டக்குடி :

                      பஸ் டயர் வெடித்து கூலி தொழிலாளி பலத்த காயமடைந்தார். திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர்  சேகர் (45). ஆவட்டி கூட்டு ரோட்டில் இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு மங்களூர் செல்லும் தனியார் பஸ்சில்(டி.என். 31- எல். 1515 ) சென்று கொண்டிருந்தார். புலிவலம் அருகே பஸ் சென்றபோது டயர் வெடித்தது. அதில் பஸ்சின் உட்புறம் பெயர்ந் தது. அதில் சீட்டில் உட்கார்ந்திருந்த சேகரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. உடன் அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கால் நரம்பு மற்றும் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தகவலறிந்த உறவினர்கள் விரைந்து வந்து மேல் சிகிச்சைக்காக சேகரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பஸ்சில் பயணித்த சக பயணி ஒருவர் கூறுகையில், வழித்தடம் சரியில்லாத காரணத்தால் பஸ்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior