உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

தீ குளித்த இரு பெண்கள் பலி

கடலூர் :

                  கடலூரில் தனித்தனியே தீ குளித்த இரு பெண்கள் இறந்தனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி குணசுந்தரி(29).திருமணமாகி 9 ஆண் டுகளாகும் இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி குணசுந்தரிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

                     அதில் விரக்தியடைந்த குணசுந்தரி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: கடலூர் முதுநகர் இருசப்பச் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வாசு மனைவி இளஞ்சியம்(36). இரண்டு பெண் கள் உள்ளனர். இந்நிலையில் 4 ஆண்டிற்கு முன் வாசு இறந்ததால் குடும் பத்தில் வறுமை நிலவியது. அதில் விரக்தியடைந்த இளஞ்சியம் நேற்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் கருகிய அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இது குறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior