உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

பரிமலையில் அன்னதானம் பொருட்கள் அனுப்பும் விழா

நெல்லிக்குப்பம் :

                   சபரிமலை சன்னிதானத்தில் மண்டல பூஜை, மகர ஜோதி காலங்களில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்ட சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 7, 8 தேதிகளில் சபரிமலையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களை நெல்லிக்குப்பத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கும் விழா நடந்தது. மாவட்ட துணைத்தவைர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.பொருட்களை ஏற்றிய லாரியை மாவட்ட செயலாளர் சிவராமன் கொடியசைத்து அனுப்பி வைத் தார். யாகமூர்த்தி, கல்யாணசுந்தரம், கண்ணபிரான், வாசுதேவன், சட்டநாதன், பலராமன், செல் வராஜ், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior