உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

லாரி மீது பஸ் மோதல்

சிறுபாக்கம் :

                    நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தொண்டங் குறிச்சி கைகாட்டி அருகே விடியற்காலை 5 மணி அளவில் டி.என்.28- ஈ. 9960 பதிவெண் கொண்ட லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் (டி.என்.21- என். 1102)  நின்றிருந்த லாரியின் பின் னால் மோதியது.  பஸ்சின் இடது புறம் கிழித்து சென் றதில் பஸ் கண்டக்டர் திருச்சி தனபால் (40), அரியலூர் திவ்யா (18), சென்னை பஷீர்அகமது (40), தூத்துக் குடி தம்பிதுரை (57), இவரது மனைவி தனலட்சுமி (50), கோவிலூர் தியாகராஜன் (37), திருச்சி பொன் மலை விக்னேஷ் (28) உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior