உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

நல்ல தண்ணீர் குளத்திற்கு தடுப்பு சுவர்: பட்டாக்குறிச்சி மக்கள் எதிர்பார்ப்பு

 ராமநத்தம் :

             ராமநத்தம் அடுத்த பட்டாக்குறிச்சி ஊராட்சி நல்ல தண்ணீர் குளத்திற்கு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்களூர் ஒன்றியம் ராமநத்தம் அடுத்த பட் டாக்குறிச்சி ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாறுதல், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டது.

                   இத்திட்டத்தில் நல்ல தண் ணீர் குளம் 5 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. குளம் மூன்று மீட்டர் ஆழம் இருப்பதால் அவ்வழியே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் குளத்தில் இருக்கும் தண்ணீரை கண்டு ஆவலோடு சென்று பார்த்து வருகின்றனர். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் கரையில் நின்று பார்வையிடும் மாணவ, மாணவிகள் தவறி குளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் குளத்தில் இறங்கி அசுத்தம் செய்யும் நிலை உள்ளது. இதனை தடுத்திட குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior