உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

குடும்ப தகராறில் மனைவி தீக்குளிப்பு: காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

சிறுபாக்கம் :

                தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்தார்.சிறுபாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந் தவர் ஆறுமுகம் (40). இவரது மனைவி கவுரி (30). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த கவுரி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட ஆறுமுகம் ஓடிச் சென்று தீயை அணைத்து கவுரியை காப்பாற்ற முயன்றார். தீயில் கருகி ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior