உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

பூட்டி கிடக்குது ஆர்.ஐ., அலுவலகம்: சிறுபாக்கம் குறுவட்ட மக்கள் அவதி

சிறுபாக்கம் :

             சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பழுதடைந்துள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகாவின் குறுவட்டமான சிறுபாக்கத்தில் பஸ் நிலையம் அருகில் 20 ஆண்டிற்கு முன்  வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட் டது.

               இந்த கட்டடம் பழுதானதால் கடந்த ஏழு ஆண்டாக பயன்பாடின்றி உள்ளது.சிறுபாக்கத்திற்கு வரும் வருவாய் ஆய்வாளர் தனி அலுவலகம் இல்லாததால் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சில மணி நேரம் மட்டுமே தங்கும் நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் வருவாய் ஆய்வாளரை தேடி அலையும் நிலை உள்ளது. மேலும், சிறுபாக்கம் குறுவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் நிலவரி, நில தீர்வை, அளவீடு, உதவித் தொகை பெற விண்ணப்பம் உள்ளிட்ட  பணிகளுக்கு  35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திட்டக் குடி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த அவல நிலையை போக்கிட பழுதடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டி வருவாய் ஆய்வாளர் கிராமத்தில் தங்கி பணி புரிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior