உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 30, 2009

கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கடலூர் :

                கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் மகன் அந்தோணி இருதயராஜ் (27). இவர் மீது மூங்கில்துறைப்பட்டு மற்றும் கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ரெட்டிச்சாவடி பகுதியில் கொலை முயற் சியில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவரது நடவடிக் கையை தடுத்திட எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் பரிந்துரையை ஏற்று  அந்தோணி இருதயராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.இதன் நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அந்தோணி இருதயராஜியிடம் போலீசார் வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior