உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் போலீஸ்காரர் உள்பட 5 பேருக்கு வலை


பண்ருட்டி:

                       பண் ருட்டி அருகே வரதட் சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பண்ருட்டி அருகே சின்னப்பகண்டை கிரா மத்தை சேர்ந்தவர் ஆரா முதன்(31). இவர் சென்னை மாநகர காவல் ஆயுதப்படைபிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
                     
                            இவரது அண்ணன் புருஷோத்தம்(40). இவர் விழுப்புரத்தில் ரயில்வே போலீசாக உள்ளார்.ஆராமுதனுக்கும் விழுப்புரம் அருகே சொர்ணாவூரை சேர்ந்த திலகவதி(26) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு  ஆராமுதன் வரதட்சணை கேட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு திலகவதி உங்கள் அண்ணி ராம்பிரியாவின் பேச்சை கேட்டு என்னை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

                         இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 11ம்தேதி ஆராமுதன் திலகவதியை ஆபாசமாக திட்டி ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக அண்ணன் புருஷோத்தமன், அண்ணி ராம்பிரியா, மாமனார் செல்வராஜ், மாமியார் மணியம்மாள், உறவினர் ரங்கநாதன் ஆகியோரும் திட்டியுள்ளனர். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம்  திலவதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆலீஸ்மேரி மற்றும் போலீசார் ஆராமுதன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior