உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

மக்கள் நல பணியாளர்கள் நன்றி


திட்டக்குடி:

                         மக்கள் நல பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கபட்டது.   

                    மங்களூர் ஒன்றிய மக்கள் நல பணியாளர்கள் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குணசேகரன், துணை செயலாளர் தமிழ்செல்வி, துணை தலைவர் ராஜேஸ்வரி, பொருளாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செய்தி தொடர்பாளர் ராமதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவநேசன், செய்தி தொடர்பாளர் கம்மாபுரம் முத்து ஆகியோர் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் மக்கள் நல பணியாளர்களுக்கு  சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிய  முதல்வர் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிப்பது எனவும், மக்கள் நல பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மகளிர் அணி புதூர் சந்திரா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior