உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

படிப்பு மையங்​களை கணினி மூலம் ஒருங்​கி​ணைத்​தல்

சிதம்ப​ரம்,​ டிச.12:​ 
 
                     சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக தொலை​தூ​ரக் கல்வி மையம் வாயி​லாக பயி​லும் மாண​வர்​க​ளின் சேவை​களை மிக​வும் விரி​வுப்​ப​டுத்​தும் வகை​யில் இந்​தி​யா​வின் முக்​கிய நக​ரங்​க​ளில் உள்ள அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ படிப்பு மையங்​கள் கணினி மூலம் ஒருங்​கி​ணைக்​கப்​ப​டு​கி​றது.​
 
                      ப​ரந்த பின்​னல் வேலை என்ற இச்​சே​வையை பல்​க​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் தொடங்கி வைத்​துப் பேசி​யது:​ இந்த சேவை மூலம் மாண​வர்​க​ளின் குறை​களை உட​னுக்​கு​டன் மிக விரை​வில் ​ தீர்க்​கப்​ப​டு​வ​தால் அதற்​கான நேரம்,​​ செலவு மற்​றும் பய​ணம் சேமிக்​கப்​ப​டு​கின்​றன.​  
 
                              தொ​லை​தூ​ரக்​கல்வி இயக்​க​கத்​தின் நடை​முறை செயல்​கள் மற்​றும் அலு​வ​லக பணி​கள் அனைத்​தும் சென்னை,​​ கோயம்​புத்​தூர்,​​ சேலம்,​​ திருச்சி,​​ மதுரை,​​ நாகர்​கோ​வில்,​​ கல்​கத்தா மற்​றும் புது​தில்லி ஆகிய படிப்பு மையங்​க​ளில் இச்​சேவை மூலம் ஒருங்​கி​ணைக்​கப்​ப​டு​கின்​றன.​
 
                         மே​லும் சேர்க்கை விண்​ணப்​ப​ப​டி​வம்,​​ விண்​ணப்​பம் வழங்​கும் விவ​ரம்,​​ சேர்க்கை ​ கட்​ட​ணம்,​​ கல்​விக் கட்​ட​ணம் மற்றும் பல விவ​ரங்​களை தெரிந்து கொள்ள இந்த சேவை பெரி​தும் உத​வும்,​​ ஒரு இடத்​தில் நடத்​தப்​ப​டும் பாடங்​கள் செயற்​கை​கோள் மூலம் கணினி மூலம் இணைக்​கப்​ப​டு​வ​தால் படிப்பு மையங்​க​ளில் இருந்​த​ப​டியே அப்​பாட வகுப்பை நேர​டி​யாக பெறு​வ​தற்கு மிக​வும் பயன்​ப​டு​கி​றது என துணை​வேந்​தர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​தார்.​ இந் நிகழ்ச்​சி​யில் பதி​வா​ளர் எம்.ரத்​தி​ன​ச​பா​பதி,​​ தொலை​தூ​ரக்​கல்வி மைய இயக்​கு​நர் எஸ்.பி.நாகேஸ்​வ​ர​ராவ்,​​ தேர்வு கட்​டுப்​பாட்டு அதி​காரி ஆர்.மீனாட்​சி​சுந்​த​ரம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior