உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

விருத்தாசலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

விருத்தாசலம்,:

          விருத்தாசலத்தை அடுத்த சத்-தி-யவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிகுமார். விவசாயத் தொழிலாளி. இவரது தங்கை மங்கையர்க்கரசி (31). இவருக்கும் கும-ராட்சியை அடுத்த விச்சூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத-னுக்கும் கடந்த 11 வரு-டங்-களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்-துக்கு பின் கணவன் மனை-விக்குள் ஏற்பட்ட பிரச்னை காரண மாக கடந்த 9 வரு-டத்-துக்கு முன் மங்கையர்க்கரசி கோபித்துக் கொண்டு மகள் சவுந்தரியாவை (10) அழைத்துக் கொண்டு சத்தியவாடிக்கு வந்து தனி யாக வசித்து வந்தார்.

 இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதுண்டு.  பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும்  குணமாகவில்லை. கடந்த 30ம் தேதி வயிற்று வலியால் துடித்த அவர் வலி தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior