உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

காத்​துக்​கி​டக்​கும் போராட்​டம்

கடலூர்,​​ டிச.​ 13:​ 
 
                    அகில இந்​திய விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க கட​லூர் மாவட்​டக் கிளை ​(மார்க்​சிஸ்ட்)​ சார்​பில்,​​ 15-ம் தேதி ​(செவ்​வாய்க்​கி​ழமை)​ முதல் தொடர்ந்து காத்​துக் கிடக்​கும் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​ ​
 
                    வி​வ​சா​யத் தொழி​லா​ளர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் த.ரவீந்​தி​ரன் ஞாயிற்​றுக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ 
 
                      வீடற்ற விவ​சா​யத் தொழி​லா​ளர்​க​ளுக்கு குடி​ம​னைப்​பட்டா வழங்​கக்​கோரி கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இந்​திய விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கம் மனு அளித்​தும் பல்​வேறு போராட்​ட​ங​க​ளை​யும் நடத்தி வரு​கி​றது.​ 21-9-2006 அன்று நினை​வூட்​டுப் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.​ 210 குடி​யி​ருப்​பு​க​ளைச் சேர்ந்த சுமார் 25 ஆயி​ரம் குடும்​பங்​கள் குடி​ம​னைப் பட்​டாவை எதிர்​நோக்கி வாட​கைக் குடி​சை​க​ளி​லும்,​​ ஒண்​டுக் குடித்​த​னங்​க​ளி​லும் இருக்​கின்​றன.​ ​
 
            த​மி​ழக அர​சால் செயல்​ப​டுத்​தப்​ப​டும் சிறப்​புக் குடி​மனை வழங்​கும் திட்​டம் ஓர​ள​வுக்​குப் பயன் அளித்து உள்​ளது.​ ஆனால் இத்​திட்​டத்தை நிறை​வேற்ற வேண்​டிய கட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை,​​ பிற்​பட்​டோர் நலத்​துறை கடந்த 10 ஆண்​டு​க​ளில் குடி​ம​னைப் பட்டா வழங்​கும் திட்​டத்​தில் குறைந்​த​பட்ச முயற்​சி​க​ளைக்​கூட எடுத்​துக் கொள்​ள​வில்லை.​ ​செய​லி​ழந்து கிடக்​கும் இந்​தத் துறை​கள் உட​ன​டி​யாக ஆம்​பு​லன்ஸ் வண்​டி​யில் ஏற்றி அவ​சர சிகிச்சை அளிக்க வேண்​டிய நோயா​ளி​யைப் போன்ற நிலை​யில் உள்​ளன.​ ​
 
                    எ​னவே எங்​கள் கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி 15-ம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் தொடர்ந்து பிரச்​னைக்​குத் தீர்வு காணும்​வரை,​​ காத்​துக் கிடக்​கும் போராட்​டம் நடத்த இருக்​கி​றோம்.​ இதில் 1000-க்கும் மேற்​பட்ட விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் குடும்​பங்​க​ளா​கப் பங்​கேற்​பர்.​ ​​ போராட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லா​ளர் த.ரவீந்​தி​ரன் தலைமை வகிப்​பார்.​ மாநி​லத் தலை​வர் ஜி.வீரை​யன் தொடங்கி வைக்​கி​றார்.​ எங்​கள் போராட்​டத்​தால் கோபம் கொள்​ளா​மல் தமி​ழக அர​சும் மாவட்ட நிர்​வா​க​மும்,​​ நீண்​ட​நாள் கோரிக்​கையை அலட்​சி​யப்​ப​டுத்​தா​மல் ஆக்​க​பூர்​வ​மா​கப் பரிசீ​லிக்க வேண்​டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior