உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

குடி​யி​ருப்​போர் சங்​க கூட்​ட​மைப்பு தர்னா

கடலூர்,​​ டிச.​ 12: ​ ​

                 கட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பி​னர் வியா​ழக்​கி​ழமை தர்னா போராட்​டம் நடத்​தி​னர்.​ க​ட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலைப் பகு​தி​யில் சுரங்​கப் பாதை அமைக்க வேண்​டும்.​ கட​லூ​ரில் அரசு மருத்​து​வம் மற்​றும் பொறி​யி​யல் கல்​லூ​ரி​கள் தொடங்க வேண்​டும்.​ திரு​வந்​தி​பு​ரத்​தைச் சுற்​று​லாத்​த​ல​மாக அறி​விக்க வேண்​டும்.​ நக​ரின் அனைத்​துப் பகு​தி​க​ளுக்​கும் போக்​கு​வ​ரத்து வசதி செய்​து​தர வேண்​டும்.​ பெண்ணை ஆற்​றங்​க​ரை​யில் தடுப்​புச்​சு​வர் கட்ட வேண​டும்.​

                  மா ​ண​வர் நலன் கருதி,​​ காலை,​​ மாலை வேளை​க​ளில் ​ சிறப்பு பஸ்​கள் இயக்க வேண்​டும்.​ நக​ரில் ஒருங்​கி​ணைந்த வடி​கால் வசதி ஏற்​ப​டுத்த வேண்​டும் என்​பன உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இப் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.​

              க​ட​லூர் ஆர்.எம்.எஸ்.​ அலு​வ​ல​கம் அருகே நடை​பெற்ற இந்த போராட்​டத்​துக்கு கூட்​ட​மைப்​பின் தலை​வர் அரங்​க​நா​தன் தலைமை வகித்​தார்.​ பொதுச் செய​லர் மு.​ மரு​த​வா​ணன்,​​ நிர்​வா​கி​கள் இப்​ரா​ஹிம்,​​ ராஜா,​​ இணைப் பொதுச் செய​லர் பி.​ வெங்​க​டே​சன்,​​ பொது​நல இயக்​கங்​க​ளைச் சேர்ந்த வெண்​புறா குமார்,​​ வழக்​க​றி​ஞர் திரு​மார்​பன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior