உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

கடன் தொல்லையால் பழக்கடை ஊழியர் தற்கொலை



நெய்வேலி,

                          கடன் தொல்லை தாங்காமல் பழ குடோன் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

                     விழுப்புரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(40). இவர் பெங்களூரில் உள்ள மொத்த பழ வியாபார கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வாரம் தோறும் கடலூர் மாவட்ட பகுதிகளுக்கு வந்து பழ கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்து கம்பெனியில் கட்டுவது வழக்கம்.இவர் வசூல் செய்த பணத்தை கம்பெனியில் சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பழ கம்பெனியினர் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். இதனையடுத்து மணிகண்டன் அவருக்கு பழக்கமான பழக்கடையில் வேலைசெய்து வந்தார். போதிய வருமானம் இன்றி கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கடன் தொல்லை அதிகமானது. இதனால் மனம் உடைந்த அவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் பழ குடோனில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை செய்து வருகின்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior