உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

மணல் திருட்டை தடுக்கவிட்டால் சாலை மறி​யல்

பண்ருட்டி,​டிச.12: ​ 
 
                 மேல்​கு​மா​ர​மங்​க​லம் தென்​பெண்ணை ஆற்​றில் நடை​பெ​றும் மணல் திருட்டு தொழிலை அரசு தடுத்து நிறுத்​தா​விட்​டால் சாலை மறி​யல் மற்​றும் அலு​வ​லக முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப் போவ​தாக அண்​ணா​கி​ராம ஒன்​றிய துணைத் தலை​வர் எம்.சி.சம்​பந்​தம் தெரி​வித்​துள்​ளார்.​
 
இது குறித்து அவர் தின​மணி நிரு​ப​ரி​டம் கூறி​யது:​ 
 
                   பண்​ருட்டி வட்​டம் மேல்​கு​மா​ர​மங்​க​லம் கிரா​மம் அருகே தென்​பெண்ணை ஆறு உள்​ளது.​ இந்த ஆற்​றில் அரசு அதி​கா​ரி​க​ளின் துணை​யோடு திருட்டு மணல் தொழில் படு ஜோராக நடை​பெ​று​கி​றது.​÷கூட்​டாக செயல்​ப​டும் மணல் திருட்​டுக் கும்​ப​லால் ஒரு நாள் இர​வில் மட்​டும் சுமார் 15-க்கும் மேற்​பட்ட லோடு ​(லாரி)​ மணல் கடத்​தப்​ப​டு​கி​றது.​ இவற்​றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.60 ஆயி​ரத்​திற்​கும் அதி​க​மா​கும்.​÷இ ​ர​வில் மணல் கடத்​தப்​ப​டும் லாரி​களை வேக​மாக ஓட்​டு​வ​தால் எழும் இரைச்​சல் கார​ண​மாக கிராம மக்​கள் நிம்​ம​தி​யாக தூங்க முடி​ய​வில்லை.​ மேலும் மது அருந்தி வாக​னங்​களை ஓட்​டு​வ​தால் வெளி​யில் தூங்​கும் மக்​க​ளுக்கோ,​​ கட்​டப்​பட்​டுள்ள கால்​ந​டை​க​ளுக்கோ பாது​காப்​பற்ற சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​
 
                      இது குறித்து நட​வ​டிக்கை எடுக்க கோரி மேல்​கு​மா​ர​மங்​க​லம் கிராம மக்​கள் முத​ல​மைச்​சர் தனிப் பிரிவு,​மாவட்ட ஆட்​சி​யர்,​​ வட்​டாட்​சி​யர் என பல​ருக்கு புகார் மனு அனுப்​பி​யும் அரசு எந்​த​வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை.​
                     
                 இ ​தைத் தொடர்ந்து பாது​காப்பு கருதி மணல் லாரி​கள் ஆற்​றுக்கு செல்​லும் வழி​யில் கிராம மக்​கள் ஒன்று சேர்ந்து பள்​ளம் பறித்​த​னர்.​ இ​த​ னால் ஆத்​தி​ரம் அடைந்த மணல் கடத்​தல் கும்​பல் இரவு நேரத்​தில் அடி​யாட்​க​ளு​டன் ஊருக்​குள் புகுந்து அரா​ஜ​கம் செய்து குடி​நீர்த் தொட்​டி​யில் இருந்த தண்​ணீரை வீணாக்கி தண்​ணீர் தட்​டுப்​பாட்டை ஏற்​ப​டுத்​தி​னர்.​ இச் சம்​ப​வம் குறித்து பண்​ருட்டி காவல் நிலை​யத்​தில்,​​ மேல்​கு​மா​ர​மங்​க​லம் கிராம மக்​கள் திரண்டு சென்று புகார் அளித்​தும் எந்த வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை,​​ போலீ​ஸô​ரும் அவர்​க​ளுக்கு துணை போவது போல் நடந்​துக் கொள்​கின்​ற​னர்.​ இந்த மணல் கடத்​தல் தொழில் உள்​ளூர் அரசு அதி​கா​ரி​க​ளின் ஒத்​து​ழைப்​பு​டன் நடை​பெ​று​வ​தாக கிராம மக்​கள் குற்​றம் சாட்​டு​கின்​ற​னர்.​ எனவே மணல் கடத்​தலை தடுத்து நிறுத்த அரசு முன்​வர வேண்​டும்.​
 
                        தொ​டர்ந்து இந்​நிலை நீடிக்​கு​மே​யா​னால்,​​ உரிய நட​வ​டிக்கை எடுக்​காத அரசை கண்​டித்து சாலை மறி​யல் மற்​றும் அரசு அலு​வ​ல​கத்தை முற்​று​கை​யிட்டு போராட்​டம் நடத்​தப்​ப​டும் என அண்ணா கிராம ஒன்​றிய துணைத் தலை​வர் எம்.சி.சம்​பந்​தம் கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior