உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

நரி​க்காக வைக்​கப்​பட்​ட வெடி வெடித்து மாண​வர் காயம்

கடலூர்,​​ டிச.​ 13:​ 
 
                நரி​க​ளுக்​காக வைக்​கப்​பட்டு இருந்த வெடி வெடித்​த​தில்,​​ மாண​வர் மணி​கண்​டன் ​(12) பலத்​தக் காயம் அடைந்​தார்.​ ​க ​ட​லூர் அருகே குள்​ளஞ்​சா​வ​டியை அடுத்த மத​ன​கோ​பா​ல​பு​ரத்​தைச் சேர்ந்த விவ​சாயி ராம​லிங்​கத்​தின் மகன் மணி​கண்​டன்.​ வெங்​க​டாம்​பேட்​டை​யில் உள்ள பள்​ளி​யில் 9-ம் வகுப்பு படிக்​கி​றார்.​ மணி​கண்​டன் சனிக்​கி​ழமை வயல்​வெ​ளி​யில் நண்​பர்​க​ளு​டன் விளை​யா​டிக் கொண்டு இருந்​தார்.​ ​
 
                  ஒரு இடத்​தில் கால் வைத்​த​போது பயங்​கர சப்​தத்​து​டன் வெடி வெடித்​தது.​ இதில் மணி​கண்​டன் பலத்​தக் காயம் அடைந்​தார்.​   கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்​சைக்​குப்​பின் மேல்​சி​கிச்​சைக்​காக புதுவை அரசு மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு போகப்​பட்​டார்.​ ​  
 
                ம​த​ன​கோ​பா​ல​பு​ரம் பகு​தி​யில் அதிக அள​வில் மணிலா பயி​ரி​டப்​பட்டு உள்​ளது.​ தற்​போது அறு​வ​டைக்​குத் தயார் நிலை​யில் மணி​லாப் பயிர்​கள் உள்​ளன.​ ஆனால் இரவு நேரங்​க​ளில் நரி​கள் கூட்​டம் கூட்​ட​மாக வந்து மணிலா பயிரை சேதப்​ப​டுத்தி வரு​கின்​றன.​ எனவே நரி​களை விரட்​டு​வ​தற்​காக விவ​சா​யி​கள் நிலத்​தில் வெடி​க​ளைப் புதைக்கு வைத்து இருந்​த​தா​கத் தெரி​கி​றது.​ 
 
                   அவ்​வாறு புதைக்​கப்​பட்ட வெடி வெடித்​த​தால் மணி​கண்​டன் காயம் அடைந்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இது​கு​றித்து குள்​ளஞ்​சா​வடி போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior