உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

என்எல்சி பெண்அதிகாரியிடம் நகை பறிப்பு



நெய்வேலி:

                           என்எல்சி அதிகாரியிடம் நகை பறித்துசென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.நெய்வேலி வட்டம் 2ல் வசித்து வருபவர் மங்கலபானு(42). இவர் என்எல்சி மத்திய தொழில் நுட்ப அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவன் சீனுவாசன். இவர் வேலூரில் எல்ஐசி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மங்கலபானு தனது மொபட்டில் மெயின் பஜாருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 4வது வட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஒரு நபர் திடீரென மங்கலபானுவின் கழுத்தில் இருந்த 5 புவன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இது குறித்து மங்கலபானு டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருடு போன நகையின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior