உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

டெல்​டா​வில் மழை:​ விவ​சா​யி​கள் மகிழ்ச்சி

கட​லூர்,​​ டிச.​ 13:​ 
 
                        தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் டெல்டா விவ​சா​யி​கள் பெரி​தும் மகிழ்ச்சி அடைந்து உள்​ள​னர்.​ கட​லூர் மாவட்ட காவிரி டெல்டா பாச​னப் பகு​தி​க​ளில் 1.5 லட்​சம் ஏக்​க​ரில் சம்பா நெல் நடப்​பட்டு உள்​ளது.​ நாற்று நட்டு 45 முதல் 60 நாள் பயி​ராக தற்​போது உள்​ளது.​ 10 தினங்​க​ளுக்கு முன் சம்பா நெல் பயி​ரில் சில பகு​தி​க​ளில் பூச்​சித் தாக்​கு​தல் காணப்​பட்​டது.​ தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் பூச்​சித் தாக்​குத​லில் இருந்து பயிர்​கள் காப்​பாற்​றப்​பட்டு இருப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​வித்​த​னர்.​தொ​டர்ந்து மழை பெய்து வரு​வ​தால்,​​ கொள்​ளி​டம் கீழ​ணை​யில் இருந்து பாச​னத்​துக்​குத் தண்​ணீர் விடு​வது 2 நாள்​க​ளாக நிறுத்​தப்​பட்டு உள்​ளது.​ டெல்டா பாச​னப் பகுதி வாய்க்​கால்​கள் அனைத்​தும் மூடப்​பட்டு உள்​ளன.​மழை குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் கூறு​கை​யில்,​​ டெல்டா சம்பா நெற்​ப​யி​ருக்கு தற்​போது பெய்​து​வ​ரும் மழை மிக​வும் சாத​க​மாக உள்​ளது.​ 10 தினங்​க​ளுக்கு முன் ஆங்​காங்கே மஞ்​சள்​நோய்,​​ இலைக்​க​ரு​கல் நோய்த் தாக்​கு​தல் காணப்​பட்​டது.​ தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் நோய்த் தாக்​குத​லில் இருந்து பயிர்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன.​ மழை பெய்​தி​ரா​விட்​டால் விவ​சா​யி​கள் பூச்​சிக் கொல்லி மருந்​து​க​ளுக்​காக ஏக்​க​ருக்கு ரூ.500 வரை செலவு செய்ய நேரிட்டு இருக்​கும் என்​றார்.​மீன​வர்​கள் கட​லுக்கு செல்​ல​வில்லை​க ​டல் சீற்​றம் கார​ண​மாக கட​லூர் மாவட்​டம் மற்​றும் காரைக்​கால் பகு​தி​க​ளில் மீன​வர்​கள் 3-வது நாளாக மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை.​ ​"வார்டு' புயல் தமி​ழ​கத்​தின் கட​லோ​ரப் பகு​தி​யில் மையம் கொண்டு இருப்​ப​தால்,​​ ​ கட​லோ​ரப் பகு​தி​க​ளில் நல்ல மழை பெய்து வரு​கி​றது.​ கட​லூர் மாவட்ட கட​லோ​ரப் பகு​தி​க​ளில் தொடர்ந்து 3 நாள்​க​ளாக மழை விட்​டு​விட்​டுப் பெய்து கொண்டே இருந்​தது.​ கட​லூர் துறை​மு​கத்​தில் 3-ம் எண் புயல் எச்​ச​ரிக்​கைக் கூண்டு ஏற்​றப்​பட்டு இருந்​தது.​ 
 
                         தொ​டர்ந்து கடல் சீற்​றம் அதி​க​மாக உள்​ளது.​ அலை​கள் 10 அடி உய​ரத்​துக்கு மேல் எழுந்து ஆர்ப்​ப​ரித்த வண்​ணம் உள்​ளன.​ மீன​வர்​கள் மீன் பிடிக்​கச் செல்ல வேண்​டாம் என்று மீன்​வ​ளத் துறை எச்​ச​ரிக்கை விடுத்​துள்​ளது.​ ​​ இத​னால் கட​லூர் மாவட்​டத்​தில் சுமார் 30 ஆயி​ரம் மீன​வர்​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை 3-வது நாளாக மீன் பிடிக்​கச் செல்​ல​வில்லை என்று,​​ தமிழ்​நாடு மீன​வர் பேரவை கட​லூர் மாவட்​டத் தலை​வர் சுப்​பு​ரா​யன் தெரி​வித்​தார்.​ ​மீன்​பி​டிக் காலங்​க​ளில் மிக​வும் பர​ப​ரப்​பு​டன் காணப்​ப​டும் கட​லூர் துறை​மு​கத்​தின் மீன் இறங்​கு​த​ளம் ஞாயிற்​றுக்​கி​ழமை வெறிச்​சோ​டிக் கிடந்​தது.​ மீன் அங்​கா​டி​க​ளுக்கு மீன் வரத்து வெகு​வா​கக் குறைந்து காணப்​பட்​டது.​பொ ​து​வாக கட​லூர் நகர மீன் அங்​கா​டி​க​ளில் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் மக்​கள் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​ப​டும்.​ மீன்​கள் வரத்​துக் குறை​வால் விலை​யும் அதி​க​ரித்து இருந்​தது.​ மக்​கள் கூட்​ட​மும இல்லை.​ ​மீ​ன​வர்​கள் மீன் பிடிக்​கச் செல்​லா​த​தால் மீன் வலை​க​ளைப் பழு​து​பார்க்​கும் வேலை​யில் ஈடு​பட்டு இருந்​த​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior