உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

சிறைக் கைதி​கள் பாது​காப்​புக்கு உயர்​மட்​டக் ​குழு

​ கட​லூர்,​​ டிச.​ 13:​ 

                  கட​லூர் மத்​திய சிறைச் சாலை​யில் கைதி​கள் தற்​கொலை மற்​றும் தற்​கொலை முயற்​சி​கள் அதி​க​ரித்து வரு​வ​தற்கு தமிழ்​நாடு நுகர்​வோர்​க​ளின் கூட்​ட​மைப்பு கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளது.​ கூட்​ட​மைப்​பின் சார்​பில் உலக மனித உரி​மை​கள் தின விழா வியா​ழக்​கி​ழமை கட​லூ​ரில் நடந்​தது.​ நிகழ்ச்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​ க​ட​லூர் மத்​திய சிறைச் சாலை​யில் தற்​கொ​லை​கள்,​​ ​ தற்​கொலை முயற்​சி​கள் அதி​க​ரித்து வரு​கி​றது.​ கைதி​களை மனி​தர்​க​ளாக நடத்​த​வில்லை.​ நீதி​மன்​றக் காவல் கைதி​க​ளை​யும் தண்​ட​னைக் குற்​ற​வா​ளி​க​ளாக நடத்​து​கி​றார்​கள்.​   கைதி​க​ளுக்கு இடையே பாகு​பாடு காட்​டப்​ப​டு​கி​றது.​ அர​சி​யல் செல்​வாக்​கும் சாதிய செல்​வாக்​கும் உள்​ள​வர்​கள்,​​ தனிச்​ச​லுகை பெறு​கி​றார்​கள்.​ சிறை வழி​காட்​டு​தல் வதி​க​ளின்​படி,​​ உணவு,​​ சுகா​தார வச​தி​கள்,​​ காற்​றோட்​ட​மான வசிப்​பி​டம் வழங்​கப்​ப​ட​வில்லை.​   உள​வி​யல் ரீதி​யான ஆலோ​ச​னை​கள் கைதி​க​ளுக்கு வழங்​கப்​ப​ட​வில்லை.​ இதன் கார​ண​மா​கவே தற்​கொ​லை​கள் அதி​க​ரிக்​கின்​றன.​ க ​ட​லூர் மத்​திய சிறை​யில் கைதி​க​ளுக்​குப் பாது​காப்பு இல்​லாத நிலையை சீர்​செய்ய உயர்​மட்​டக்​குழு ஒன்றை அமைக்க வேண்​டும்.​ விடு​தலை ஆகும் கைதி​க​ளுக்கு வாழ்​வா​தா​ரத்​துக்​கான கடன் வசதி,​​ வேலை​வாய்ப்பு உள்​ளிட்​ட​வற்றை செய்ய வேண்​டும்.​   க​ட​லூர் சிப்​காட் பகு​தி​யில் மனி​தர்​கள் வாழ முடி​யாத அள​வுக்கு தொழிற்​சா​லை​க​ளால் நிலம்,​​ நீர்,​​ காற்று மாசு படுத்​தப்​பட்டு வரு​கி​றது.​   அங்கு மனி​தர்​கள் வழ்​வுக்​கான ​ உத்​த​ர​வா​தத்தை அரசு அளிக்க வேண்​டும்.​   தியா​க​வல்லி பகு​தி​யில் அனல்​மின் நிலை​யம் அமைப்​பது தொடர்​பாக நடந்த கருத்​துக் கேட்​புக் கூட்​டத்​தில் கலந்து கொண்​ட​வர்​கள் மீது,​​ போடப்​பட்​டுள்ள பொய் வழக்​கு​களை வாபஸ் பெற வேண​டும்.​ ம​னித உரிமை ஆணை​யம்,​​ மக​ளிர் ஆணை​யம் உள்​ளிட்ட ஆணை​யங்​கள் சுதந்​தி​ர​மா​கச் செயல்​பட அடிப்​படை வச​தி​க​ளும் நிதி ஆதா​ரங்​க​ளும் அளிக்க வேண்​டும்.​ க ​ட​லூர் மீன​வர்​கள் மீது தாக்​கு​தல் நடத்​திய இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீது வழக்​குப் பதிவு செய்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ கடல் மீன் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை இயற்​றக் கூடாது.  ​ காவல் நிலை​யங்​க​ளில் சாவு​க​ளை​யும் சித்​தி​ர​வ​தை​க​ளை​யும் தடுக்க அனைத்து காவல் நிலை​யங்​க​ளி​லும் வெப் கேமரா பொருத்தி,​​ அனைத்து நட​வ​டிக்​கை​க​ளை​யும் பதிவு செய்ய வேண்​டும் என்று கோரும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.​ நி​கழ்ச்​சிக்கு தமிழ்​நாடு நுகர்​வோர்​க​ளின் கூட்​ட​மைப்​பின் நிர்​வா​கச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் தலைமை தாங்​கி​னார்.​ மீ​ன​வர் பாது​காப்பு இயக்​கச் செய​லா​ளர் ஏழு​மலை,​​ தனி​யார் பஸ் தொழி​லா​ளர்​கள் சங்​கத் தலை​வர் பண்​ட​ரி​நா​தன்,​​ நுகர்​வோர் சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் புக​ழேந்தி,​​ பால​சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ எல்.கே.ரவி,​​ ஆல்​பேட்டை பாபு உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​ அருள்​செல்​வம் நன்றி கூறி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior