உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

நெய்வேலி: 

                    நெய்வேலி புனித அந்தோணியார் ஆங்கிலப்பள்ளியில் என்எல்சி நிறுவனம், ரெஸ்ட் தொண்டு நிறுவனம், செஸ் கிளப் ஆகியவை இணைந்து மாநில அளவில் பார்வையற்றவர்களுக்கான 5ம் ஆண்டு சதுரங்க விளையாட்டு போட்டியை  நடத்தியது. இதில் தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங் களை சேர்ந்த சதுரங்க வீரர்கள் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் பாஸ்கர்ராஜ் தலைமை தாங் கினார். செஸ்கிளப் செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.  தேசிய நடுவர்கள் முருகன், மித்ரகாந்த், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எல்சி, எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்க தலைவர் அன்பழகன், முதன்மை மேலாளர் தங்கராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை பவுல்ராஜ் செய்திருந்தார்.  செயலர் வின்சென்ட் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior