உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

பனவாரி ஓடையில் மேம்பாலம் கட்ட கலெக்டருக்கு மனு

சிறுபாக்கம் :

                சிறுபாக்கம் அருகே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

               இதுகுறித்து மங்களூர் ஒன்றியம் பாசார் ஊராட்சி தலைவர் வரதராஜன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

               பாசார் ஊராட்சியில் கிராமத்தை ஒட்டியே பனவாரி ஓடை செல்கின்றது. மங்களூர், விநாயகநந்தல், பொயனப் பாடி, சிறுபாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இவ்வழியாக பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓடையை கடந்து செல்கின்றனர். மழை காலங்களில் பனவாரி ஓடையில் அதிகளவு செல்லும் தண்ணீரால் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது.  எனவே போர்க்கால அடிப்படையில் கிராம மக்களின் நலன் கருதி பனவாரி ஓடையினை நேரில் பார்வையிட்டு விரைவில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior