உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

.சாலை பாதுகாப்பு வார விழா முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர்

விருத்தாசலம் :

           சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விருத்தாசலத்தில் ஊர்காவல் படை சார்பில் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

           விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு படை தளபதி ரவீந்திரநாதன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ராஜசேகரன் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார். பஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப் பட்டது. உதவி படை தளபதிகள் தண்டபாணி, ஸ்ரீதரன், குமரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

 சிதம்பரம்:

ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.எஸ்.பி., மூவேந்தன் துவக்கி வைத்தார். சிதம்பரம் கீழ வீதி, பஸ் நிலையம், எஸ்.பி., கோவில் தெரு, மேல வீதி வழியாக  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரங்கநாதன்  ஊர்வலத்தை வழி நடத்தி சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior