உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

சி.ஐ.டி.யூ., மாநில மாநாடு கடலூரில் இன்று துவங்குகிறது

கடலூர் :

                இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,) 11வது தமிழ்மாநில மாநாடு கடலூரில்  இன்று துவங்குகிறது.

                மா.கம்யூ., வின் தொழிற்சங்க பிரிவான சி.ஐ.டி.யூ.,வின் 11வது மாநில மாநாடு கடலூரில் இன்று துவங்கி மூன்று நாள் நடக்கிறது.  இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் மாநாட்டின் துவக்க விழாவிற்கு மாநில தலைவர் பத்மனாபன் தலைமை தாங்குகிறார். ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடியை மாநில துணை தலைவர் வைத்தியநாதன் பெற்றுக் கொள்கிறார்.  ஹேமச்சந்திரன் நினைவு ஜோதியை மாநில துணைத் தலைவர் ராமதாஸ், கோவிந்தராஜன் நினைவு ஜோதியை மாநில செயலாளர் பெற்றுக் கொள்கின்றனர். மாநாட்டு கொடியை ஸ்தாபக பொதுச்செயலா ளர் உமாநாத் ஏற்றுகிறார். மாநில துணைத் தலைவர்  பஞ்சரத்னம் தியாகிகள் தீபம் ஏற்றுகிறார். வரவேற்புக்குழு தலைவர் மூசா வரவேற்கிறார். எம்.பி., தபன்சென் துவக்கவுரையாற்றுகிறார். ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். பகல் 12 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. மாலை பிரதிநிதிகள் விவாதம் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior