உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

அரசு கலை பண்பாட்டுத்துறையில் பணியாற்ற ஆசிரியர்கள் பரிந்துரை

கடலூர் :

              தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையினரால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட கீழ்க்காணும் பணியிடங்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த கீழ்காணும் தகுதியுடையவர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்ய உள்ளனர்.

           மிருதங்கம், வயலின், நாதசுரம், தேவார குரலிசை ஆசிரியர் பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டயம், பட்டம். 1.7.09 அன்றைய தேதியில் 30வயது முடிவடையாமல் இருக்க வேண்டும். இத்துடன் உயர் கல்வித்தகுதிக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. நெசவுக்கலை, சிற்பக் கலை, காட்சிவழி தொடர்பு வடிவமைப்பு பயிற்றுனர், செராமிக் பயிற்றுனர்கள்  குறைந்த பட்ச பொதுக்கல்வி, மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டயம், வயது 40க்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் இவ்வலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள் தங்களது அசல் பதிவு அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றுகளுடன் வரும் 6ம் தேதிக்குள் நேரில் வந்து சரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior